பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது:17ஆயிரத்து 629 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்354 பேர் வரவில்லை


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது:17ஆயிரத்து 629 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்354 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:47 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17ஆயிரத்து 629 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கள்ளக்குறிச்சி


தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தமிழ் தேர்வுடன் தொடங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுதுவதற்கு 76 அரசு மேல்நிலைப் பள்ளிகள, 10 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 37 சுயநிதி பள்ளிகள் என்று மொத்தம் 123 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 612 மாணவர்கள், 9 ஆயிரத்து 371 மாணவிகள் என்று மொத்தம் 17 ஆயிரத்து 983 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 83 ஆண்கள், 106 பெண்கள் என்று மொத்தம் 18 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு 74 தேர்வு மையங்களிலும், தனி தேர்வர்களுக்கு தனியாக 4 தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கியது.

பொதுத்தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை முதல் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். இதில் தமிழ் தேர்வை 8 ஆயிரத்து 423 மாணவர்களும், 9 ஆயிரத்து 206 மாணவிகளும் எழுதினார்கள். 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

அதேபோன்று, தனித்தேர்வர்களி்ல 68 ஆண்களும், 92 பெண்களும் எழுதினார்கள். 29 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு நடைபெறும் போது பறக்கும் படையினர் அவ்வப்போது தேர்வு மையங்களுக்கு சென்று யாரேனும் காப்பி அடிக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர்.

தேர்வு பணியில் தொடர்பு அலுவலர், வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை ஆகிய பணிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என்று மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தேர்வு மையங்களில் 500-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை மதிப்பீட்டு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர்.


Next Story