பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 3 July 2023 10:26 AM GMT)

பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் காண்பா நகரை சேர்ந்த செல்வகுமார் மகள் காவேரி. இவர் திருப்பத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென காவேரி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story