பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூரைச் சேர்ந்த சசி என்பவருடைய மகன் கபிலன் (வயது 17). பிளஸ்-1 மாணவர். இவர் நேற்று முன்தினம் சுரண்டை அருகே ஆய்க்குடி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளாா். ஆனால் அவர்கள் விளையாட அனுப்ப மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கபிலன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story