தீக்காயமடைந்த பிளஸ்-1 மாணவி சாவு


தீக்காயமடைந்த பிளஸ்-1 மாணவி சாவு
x

தீக்காயமடைந்த பிளஸ்-1 மாணவி இறந்தார்.

புதுக்கோட்டை

கீரனூர் ரெயில்வே நிலைய பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் சூர்யா (வயது 15). இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று இவர், விறகு அடுப்பில் சுடு தண்ணீர் போடுவதற்காக விறகு மீது மண்எண்ணெயை ஊற்றினார். அப்போது அவர் மீது மண்எண்ணெயை பட்டு தீப்பிடித்தது. இதனால் அவர் அலறினார். இதைக்கண்ட அவரது தந்தை பன்னீர்செல்வம் சாக்குபையை கொண்டு தீயை அணைக்க முயன்ற போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story