கடலூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் சாவு


கடலூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் சாவு
x

கடலூர் துறைமுகம் அருகே கடலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகம் அருகே உள்ள ராசப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் விஸ்வா (வயது 17). தற்போது இவர் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் விஸ்வா, ராசாப்பேட்டை கடல்பகுதியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தாய், கடற்கரை பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் கடற்கரை ஓரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து விஸ்வா கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஸ்வா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாாின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story