பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து சாவு


பிளஸ்-2 மாணவி மயங்கி விழுந்து சாவு
x

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் பவித்ரா (வயது 17). இவர் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு பவித்ரா சென்றிருந்தார். அங்கு மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா எதிர்பாராதவிதமாக திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆசிரியர்கள், சிகிச்சைக்காக முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பவித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவி உடல் நலம் பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story