ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.

சென்னை,

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

இந்தநிலையில் ஸ்பெயினில் முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதல்-அமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story