16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமி பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





