ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது


ஓட்டல் உரிமையாளரை தாக்கிய  5 பேர் கைது
x

பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:-

ஓட்டல் உரிமையாளர்

பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41). பல்லடம் -தாராபுரம் ரோட்டில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தெற்கு பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவருக்கும், இவரது நண்பர் ஜெயமணி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் கடந்த 24-ந் தேதி தெற்கு பாளையம் பிரிவு அருகே வேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து அன்று இரவு 10 மணியளவில் உணவகத்தில் வேலை முடித்து வேல் முருகன், அவரது நண்பர் குணசேகரன் ஆகியோர் வீடு திரும்பிகொண்டிருந்தனர். அப்போது பல்லடம் அருகே தெற்கு பாளையம் பிரிவில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்து தாக்கினர். இது குறித்து பல்லடம் போலீசில் வேல்முருகன் புகார் செய்தார்.

5 பேர் கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்த அருட்செல்வன் ( 25), புவனேஸ்வரன் (25), கோபாலகிருஷ்ணன் (23), தாமரை சந்திரன் ( 20), மற்றும் பனப்பாளையத்தை சேர்ந்த ராஜு (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சிறிய சரக்கு வேன், அரிவாள், பட்டாக்கத்தி மற்றும் இரும்பு குழாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story