போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x

போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

கரூர்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி லாலாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் சிலைகள் ஆறு மற்றும் குளங்களில் கரைக்கப்பட உள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணிக்காகவும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி லாலாபேட்டையில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். லாலாபேட்டை சந்தப்பேட்டையில் இருந்து தொடங்கிய போலீசார்கொடி அணி வகுப்பு கடைவீதி, காந்தி சிலை, கொடிக்கால் தெரு, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.


Next Story