பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 12 Jun 2023 6:11 PM GMT (Updated: 14 Jun 2023 7:38 AM GMT)

ஆற்காடு பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி வழிகாட்டுதலின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் (இணைய வழி குற்றப்பிரிவு) மேற்பார்வையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ஆற்காடு பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிதி நிறுவன மோசடி, சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம், இளையதள முகவரி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.


Next Story