போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
மதுரையை சேர்ந்த போலீஸ்காரருக்கு கத்திக்குத்து விழுந்தது.
மதுரை
பேரையூர்,
மதுரையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 47). இவர் மதுரை ஆயுதப்படையில் தலைமை ேபாலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். சாப்டூரை சேர்ந்தவர் ஆனந்த நடராஜன் (45). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் தலைமை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். சம்பவத்தன்று சாப்டூரில் உள்ள தந்தைக்கு சொந்தமான வீட்டில், இருவரும் குடும்பப் பிரச்சினையை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆனந்த நடராஜன் கையில் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனின் தோள்பட்டையில் குத்தினார். இதில் பார்த்திபனுக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story