கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; தி.மு.க. பிரமுகர் கைது


கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டல்; தி.மு.க. பிரமுகர் கைது
x

ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றிருந்தனர். அப்போது ஒரு பெண் போலீசிடம் அங்கிருந்த கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் போலீஸ் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்து விசாரித்தனர். அதில் கைது செய்யப்பட்ட கண்ணன் தி.மு.க. பிரமுகர் என்பதும், பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதியானது.

இதையைடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story