வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
x

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கருப்பையா முன்னிலை வகித்தார். பயிற்சியில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிராஜுதீன், வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், ஷகிலா பேபி, குமார், சிதம்பரம் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story