நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
மயிலாடுதுறை


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க அனுமதி அளித்துள்ளதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் மணிசெந்தில், கிருஷ்ணகுமார், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

---


Next Story