பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
x

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். இதில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, இணை பதிவாளர் செந்தில்குமார், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, தி.மு.க. பிரமுகர் வாலை முத்துச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராஜலெட்சுமி, இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story