பொங்கல் பரிசுத்தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்


பொங்கல் பரிசுத்தொகுப்பு:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 9 Jan 2024 11:08 AM GMT (Updated: 9 Jan 2024 11:18 AM GMT)

பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார், என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story