பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மோகனூர்:
ஆடி மாத பிரதோஷத்தையொட்டி மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி பகவான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





