தேய்பிறை அஷ்டமியையொட்டிசிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை


தேய்பிறை அஷ்டமியையொட்டிசிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 13 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதன்படி பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர், வடகரையாத்தூர் மற்றும் ஜேடர்பாளையத்தில் உள்ள சிவன் கோவில், கோப்பணம்பாளையம், பரமேஷ்வரர் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story