அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 100-வது ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அன்ன காமாட்சி அம்மன் உற்சவ திருவீதி உலா மற்றும் கரூர் கணேசன் குழுவினரின் நாதஸ்வர மேளதாள நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story