பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி


பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி
x

பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், செயலாளர் ராதிகா உள்பட பலர் கலந்து கொண்டு தபால் பெட்டியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டையை அனுப்பினர்.


Next Story