சோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாண்டிய வாரிசுகள் - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு


சோழர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாண்டிய வாரிசுகள் - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
x

"பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்" என்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

மதுரை,

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், "பகை மறவா பாண்டியரின் வாரிசுகள்" என்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்குமான பகைதான் பொன்னியின் செல்வன் கதை. சோழர்களை பெருமைப்படுத்தும் வகையில் மட்டும் இந்த நூல் எழுதப்பட்டுள்ள நிலையில், பாண்டிய நாடான மதுரை மக்கள் சேட்டை கலந்த காட்டத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில், "சோழர்களே! பாண்டிய நாட்டுக்கு வந்தோமா, மீனாட்சிய கும்பிட்டோமா, தியேட்டர்ல படத்தை ஓட்டுனோமா, புரோட்டாவை திண்டோமானு போயிட்டே இருக்கணும்... அத விட்டுபுட்டு மறுபடியும் ஏதாவது எசக்கு பிசக்கா பண்ணனும்னு நினைச்சா அப்புறம் அவ்வளவுதான்..." என்று நகைச்சுவை கலந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடிகர்களின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story