விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்


விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
x

முதுகுளத்தூர் பகுதியில் விளை நிலங்களின் வழியாக ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் விளை நிலங்களின் வழியாக ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளைநிலங்கள்

முதுகுளத்தூர் பகுதிகளில் விவசாயிகள் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் விளைநிலங்கள் வழியாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குறிப்பாக அரசு கலைக்கல்லூரி எதிரே உள்ள விளை நிலங்கள் வழியாக செல்லும் மின்கம்பிகள் தொட்டுவிடும் தூரத்தில் தாழ்வாக செல்கின்றன.

இதில் ஏராளமான மின்கம்பங்கள் ஒருபுறமாக சாய்ந்து உள்ளன. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:- முதுகுளத்தூர் பகுதி விளைநிலங்களில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அச்சம்

பலத்தகாற்று வீசும்போது மின்கம்பிகள் உரசி அறுந்து விழும் அபாயம் உள்ளதால் விவசாயிகள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அச்சம் அடைகின்றனர். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பெரும் விபத்து நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story