போடி, நடுக்கோட்டை பகுதிகளில் 4ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


போடி, நடுக்கோட்டை பகுதிகளில்  4ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Feb 2023 5:04 PM GMT (Updated: 1 Feb 2023 5:05 PM GMT)

போடி, நடுக்கோட்டை பகுதிகளில் 4ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

போடி துணை மின் நிலையத்தில் 4ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பெரியகுளம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி வடக்கு பிரிவு ஜம்புலிபுத்தூர் பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி, ராஜப்பன்கோட்டை, தாதனூர், நடுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 4ந்தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story