கடமலைக்குண்டு, காமாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


கடமலைக்குண்டு, காமாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 May 2023 9:00 PM GMT (Updated: 2 May 2023 9:00 PM GMT)

கடமலைக்குண்டு, காமாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திசுனை, வாலிப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story