கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது


கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
x

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது

திருநெல்வேலி

வள்ளியூர் (வடக்கு):

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலாது அணு உலையில் கடந்த 6-ந் தேதி மதியம் 12.30 மணியளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அணுஉலையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டனர். அந்த பணி முடிந்ததை தொடர்ந்து முதலாவது அணு உலையில் நேற்று முன்தினம் மாலை 2 மணியளவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1,000 மெகாவாட் மின்உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின்நிலைய வட்டாரம் தெரிவித்தது. 2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story