மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கம் மீட்பு


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பக்கம் மீட்பு
x

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டிருந்தது.

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மர்மநபர்களால் முடக்கப்பட்டிருந்தது. இவரின் டுவிட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து, வேரியோரியஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.

கொரோனா உடன் போராடும் மக்களுக்கு உதவ நிதி திரட்ட போவதாகவும், அதற்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி அளிக்க வேண்டும் என பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு இன்று மீட்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டிருந்த பதிவுகளும் நீக்கப்படுள்ளது.

டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பதிவில் கூறியதாவது,

அன்புள்ள அனைவருக்கும், எனது டுவிட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டு மீட்டமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. மேலும், டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுக்க உதவிய மாநில சைபர் கிரைம் பிரிவு, டுவிட்டர் அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story