இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 9 Oct 2023 5:49 PM GMT (Updated: 9 Oct 2023 7:20 AM GMT)

பருத்திப்பள்ளி, புதன்சந்தை, உஞ்சனை, நல்லூர் ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

இன்று

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர் பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், வண்டி நத்தம், அவினாசி பட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம் பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளையும் மின்சாரம் நிறுத்தம்

இதேபோல் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, உஞ்சனை, நல்லூர் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, கலங்காணி, காரைக்குறிச்சி.

உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடைய கவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகப்பாளையம், 85 கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப் பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம் மற்றும் கரிச்சிப்பாளையம்.

நல்லூர், கந்தம்பாளையம் ,மணியனூர், வைரம்பாளையம், கோலவரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூர் சித்தாளந்தூர், பெருங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், முருகன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story