நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகர், தொழிற்பேட்டை, பவர் ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1 மற்றும் பகுதி-2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், கூலியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story