தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
x

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1, 2, 3, 4, 5 ஆகிய ஐந்து அலகுகளில் இன்று அதிகாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 5 யூனிட்டுகளில் மொத்தம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அனல் மின் நிலையத்தில் போதுமான அளவே நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story