கஞ்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கஞ்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

பராமரிப்பு பணிகளுக்கான கஞ்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம்

கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வேம்பி, நேமூர், முட்டத்தூர், செ.குன்னத்தூர், கஞ்சனூர், சங்கீதமங்கலம், பழையகருவாட்சி, புதுகருவாட்சி, நகர், சி.என்.பாளையம், நங்காத்தூர், செ.புதூர், பூண்டி, ஏழுசெம்பொன், அன்னியூர், தென்பேர், வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, அடங்குணம், திருக்குணம், கொசப்பாளையம், பனமலைப்பேட்டை, வெள்ளையாம்பட்டு, புதுப்பாளையம், நந்திவாடி, நரசிங்கனூர், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், அசோகபுரி, செ.கொளப்பாக்கம், குண்டலப்புலியூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


Next Story