கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை


கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை
x

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம். துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட உபமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்தடை செய்யப்படும், என ெதரிவித்துள்ளார்.


Next Story