பூஞ்சேரியில் நாளை மின்தடை


பூஞ்சேரியில் நாளை மின்தடை
x

பூஞ்சேரியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் பாதிக்கப்படும்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட வேலூர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இந்த துணைமின்நிலையத்திற்குட்பட்ட பெரும்பாக்கம், மடையம்பாக்கம், பாக்கூர், பூஞ்சேரி, வேலூர் பெரிய காலனி, சிறுவங்குனம், மேலப்பட்டு, வீரபோகம், பரமன்கேணி, சீக்கினாங்குப்பம், பெருந்துறவு, கொடூர், சத்தியமங்கலம், வேட்டைக்கார குப்பம், மடுவங்கரை, வேலுர், அச்சு விளாகம், கரிக்காமலை, சத்திரம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் வினியோகம் பாதிக்கப்படும்.

இவ்வாறு மதுராந்தகம் கோட்ட செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story