நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:30 AM GMT (Updated: 19 Oct 2023 12:31 AM GMT)

திண்டுக்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் நகர், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதையொட்டி பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியாரபட்டி, வட்டப்பாறை, சரவணா மில் பகுதிகள், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல், சின்னாளப்பட்டி மின்சார வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story