இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சத்திரப்பட்டி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர், ரெட்டியபட்டி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழ ராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சேத்தூர்

அதேபோல சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.


Next Story