திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் இன்று மின்தடை


திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் இன்று மின்தடை
x

திருநின்றவூர், பென்னலூர்பேட்டையில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்

ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தை சேர்ந்த திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநின்றவூர், பாக்கம், புலியூர், ஆலத்தூர், பாலவேடு, மேலப்பேடு, முத்தாபுதுப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கோவில் குப்பம், அரன்வாயல் குப்பம், புட்லூர், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு, கொட்டாம்பேடு, நெமிலிச்சேரி, கருணாகரஞ்சேரி, புதுச்சத்திரம், ஜெமீன் கொரட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சீத்தஞ்சேரி மின்பாதை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை புதுச்சேரி, மேல்கரமனூர், பென்னலூர்பேட்டை, எல்லமா கண்டிகை, அம்மம்பாக்கம், சீத்தஞ்சேரி, கச்சூர், எஸ்.ஆர்.குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.

மேலும் ஊத்துக்கோட்டை நகரம் மின்பாதை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை அண்ணாநகர், அய்யனார் நகர், பாலாஜி நகர், திருவள்ளூர் ரோடு, கொய்யா தோப்பு தாலுகா அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.


Next Story