வில்லிபாளையம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


வில்லிபாளையம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாக்கவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story