நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

புத்திரகவுண்டன்பாளையம், சங்ககிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சேலம்

வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஓட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியக்கவுண்டன்புதூர், பெரியகிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருச்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சங்ககிரி துணைமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. படைவீடு, பச்சாம்பாளையம், கொழிஞ்சிபாளையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சகொரை, தண்ணீர்பந்தல் பாளையம், சின்னாகவுண்டனூர், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலை மடையானூர், திருநகர் பைபாஸ் சிட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.


Next Story