நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2023 11:30 PM GMT (Updated: 19 Oct 2023 11:31 PM GMT)

கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி

கம்பம், போடி

தேனி மாவட்டம், கம்பம், மார்க்கையன்கோட்டை, போடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், கம்பம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, மார்க்கையன்கோட்டை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிகுத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும், போடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பி.அணைக்கரைப்பட்டி, பி.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டிப்பட்டி

பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனையொட்டி ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story