நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

தாமரைப்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


Next Story