நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நெல்லிக்குப்பம் பத்திரப்பதிவு அலுவலகம், பூலோகநாதர் கோவில், பத்மாவசம், காமராஜர் நகர், ஜானகிராம் காலனி, மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் வரை, ரகுமான் நகர், எஸ்.என்.நகர், திருக்குளம், ஆரோக்கியசாமி தெரு, தீயணைப்பு நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, பூந்தோட்டம், ராஜாஜி வீதி, கைலாசநாதர் கோவில் வரை நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story