குறிஞ்சிப்பாடி, வடக்குத்து பகுதியில் நாளை மின் நிறுத்தம்


குறிஞ்சிப்பாடி, வடக்குத்து பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

குறிஞ்சிப்பாடி, வடக்குத்து பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேல விநாயகர் குப்பம், விருப்பாச்சி, பொட்டவெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள் மருவாய், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார் குப்பம், கொளக்குடி, கருங்குழி, வெங்கட்டங்குப்பம், ஆடூர் அகரம், வரதராஜன் பேட்டை, ஆடூர் குப்பம், கண்ணாடி, கள்ளையங்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூதம் பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் வடக்குத்து துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வடக்குத்து கிழக்கு, கீழூர், பாச்சாரப்பாளையம், பெரிய கோவில் குப்பம், சந்தவெளிப்பேட்டை, கன்னுத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேற்கண்ட தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தெரிவித்துள்ளார்.


Next Story