வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, கீழாத்தூர், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

மழையூர், ஆலங்குடி

ஆலங்குடி, மழையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இருந்து மின் வினியோகம் பெறும், பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசடிப்பட்டி மாங்கோட்டை, பாப்பான் விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்களம், மழையூர், கருப்பட்டிபட்டி, மாத்தூர், தொண்டமான்விடுதி நைனான்கொல் லை, கெண்டையன்பட்டி துவார், ஆத்தங்கரைவிடுதி, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story