சீர்காழி, திருவெண்காடு, பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


சீர்காழி, திருவெண்காடு, பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பொறையாறு, செம்பனார்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

சீர்காழி, திருவெண்காடு

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி நகரம் முழுவதும், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும்,

திருவெண்காடு துணைமின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம், மங்கைமடம், தென்னாம்பட்டினம், திருவாளி, நாங்கூர், மணிகிராமம், ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலினை செயற்பொறியாளர் (பொறுப்பு) விசுவநாதன் தெரிவித்தார்.

பொறையாறு, செம்பனார்கோவில்

பொறையாறு, மற்றும் கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிளான பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன் பந்தல், இலுப்பூர், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில் புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி,கண்ணப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, காரம்பள்ளம், தேவானூர், விசலூர், மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி. கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும், அதேப்போல் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், காலகஸ்திநாதபுரம், மடப்புரம்கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு முடிகண்டநல்லூர் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. என்றும்இத்தகவல் மாறுதலுக்கு உட்பட்டது என்ற தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற் பொறியாளர்,அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.


Next Story