இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 21 Sep 2022 7:30 PM GMT (Updated: 21 Sep 2022 7:31 PM GMT)

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்

ராசிபுரம் மின்கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமகிரிப்பேட்டை துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, குரங்காத்து பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தல் காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று ராசிபுரம் மின்கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகே துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல் புதூர், கொட்டாம்பட்டி, ‌நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கி பாளையம் புத்தூர், வேப்பமரத்து புத்தூர், மணிகட்டிபுத்தூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம், சுப்பநாயக்கனூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார்


Next Story