நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 16 Oct 2023 7:30 PM GMT (Updated: 16 Oct 2023 7:31 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எலவடை, மருதிப்பட்டி, மேட்டுவலசை, எம்.வெள்ளாளப்பட்டி, எம்.வெளாம்பட்டி, ஆர்.எஸ். தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூத்தம்பட்டி, கூச்சனூர், பள்ளிப்பட்டி, சுண்டக்காப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி பச்சனாம்பட்டி, கதிரம்பட்டி, சாமாண்டஅள்ளி, கே.ஈச்சம்பாடி பேப்பர் மில் மற்றும் இதனை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோன்று பென்னாகரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது இதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகப்பாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.


Next Story