12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்


12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
x

சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.


Next Story