கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு


கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
x

மோகனூர் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து, விசேஷ பூஜை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

1 More update

Next Story