கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு


கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 17 May 2023 7:00 PM GMT (Updated: 17 May 2023 7:00 PM GMT)

கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி, ஏமப்பேரில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் நந்தீஸ்வரர் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடாந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் பாலாம்பிகா சமேத தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், புதுப்பட்டு சொர்ணபுரீஸ்வரர், மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரர், பாக்கம் சோளீஸ்வரர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story