கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்..!


கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் -  அமைச்சர்  சேகர்பாபு தொடங்கி வைத்தார்..!
x

பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது

சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story